Sunday 18 December 2011

நோக்கா வர்மம்

ஆயிரத்து அறநூறு ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு தமிழ்நாட்டில் பிறந்த போதிதர்மர் தற்காப்பு கலையையும் நோக்கு வர்ம கலையையும் சீன தேசத்திற்கு சென்று பரப்பினார்.

இதை 7  ஆம் அறிவு படத்தில் காட்டியிருப்பார்கள்.  ஆனால் படத்தின் இறுதியில் , நாம் போதிதர்மனையும் மறந்து விட்டோம் அவரது தற்காப்பு கலையையும் மறந்து விட்டோம் என்ற கூறியிருப்பார் படத்தின் இயக்குனர்.

இந்த இடத்தில் தான் நான் மாற்று கருத்தினை கொண்டுள்ளேன் அதற்கான காரணத்தையும் கூற விழைகிறேன். 

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்திய நோக்கு வர்மத்தினை ஆண்கள் நாங்கள் மட்டும்தான் மறந்து விட்டோம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். நான் கூறும் இக்கருத்தினை மறுக்கும் மணமான ஆண்கள் ,  தங்கள் மனைவிமார் கூறும் ஏதுனும் ஒரு விஷயத்திற்கு மறுத்து பாருங்களேன். 



மேற்கூறியவாறு ஏதேனும் நடந்தால் முதலில் உங்கள் மனைவி உங்கள் மீது தொடுப்பது " நோக்கு வர்மம் " . அவர் உங்களை பார்க்கும் பார்வையிலேயே நீங்கள் சம்மதித்து விடுவீர்..

அப்படியும் நீங்கள் மசியவில்லைஎனில் ,  போதிதர்மன் கூட அறிந்திராத அடுத்த ஆயுதம் " நோக்கா வர்மம் ". நீங்கள் ஒத்துக்கொள்ளாத ஒரு விஷயத்தினை ஒத்துக்கொள்ளும் வரை உங்கள் மனைவியின் கண்களுக்கு நீங்கள் காணாமல் போய் விடுவீர் . அதுமட்டுமல்லாது நீங்கள்மட்டும் பேசுவது உங்கள் மனைவியின் காதுகளை எட்டாது. சமையலறைக்கு விடுமுறை கிடைக்காது . சமையலின் போது உப்பு சேர்க்கப்படமாட்டாது , உப்பில் மட்டுமே சமையல் நடைபெறும் , காந்தியின் உப்பு சத்தியாகிரகம் மாதிரியான மனைவிமாரின் உப்பு சத்தியாகிரகம் .  உங்களுக்கு வேறு வழியிருக்காது. அதையும் மீறினால் .. இருக்கவே இருக்கிறது தாய் வீட்டு சீதனப்பாத்திரங்கள்.. 

முடிவில் நீங்கள் வெற்றிகரமாக தோற்றே ஆகவேண்டும்.  இப்போது சொல்லுங்கள் நாம் அனைவருமா போதி தர்மன் கலைகளை மறந்து விட்டோம்.. 


அன்புடன் விவேக்,

While you smile , You are Beautiful.. 
While you Laugh, You are very Beautiful.. 
Atleast be beautiful.

No comments:

Post a Comment