Monday 16 January 2012

தூக்கம் நம் கண்களை ..

ஜானகி அம்மாவின் குரலில் ஆலயமணி படத்தின் தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே...என்ற பாடல் ஒலித்தது..  ஆனால் தூக்கம்தான் வருவதாய் இல்லை..

சின்ன வயதில் விளையாடிய நேரம் எவ்வளவு தூங்கும் நேரம் எவ்வளவு என்று தெரியாத அளவிற்கு இருக்கும் விளையாட்டும் தூக்கமும்..

ஆனால் இன்று தூங்கபோகும் நேரம் கூட மற்ற நேரத்தினை பற்றிய யோசனை..
இதன் காரணமாக மறு நாள் அலுவலக நேரத்தில் கொட்டாவி மேல் கொட்டாவி.. அட நிம்மதியாக கொட்டாவி விட முடிகிறதா.. நாகரீகம் கருதி அரைகுறையாகத்தான் கொட்டாவி விடமுடியும்.. தும்மலுக்கும் இதுதான் கதி..
சிலர் உச்ச பட்சமாக தும்மும்போது சிறிதுக்கூட சத்தம் வராமல் தும்முவார்கள் பாருங்கள்.. என்று அவர்கள் காது ஜவ்வு கிழியுமோ .. அன்று முதலாவது அவர்கள்  திருந்துவார்கள் என்று நம்புகிறேன்.. ஆனால் சிறு குழந்தைகளோ புற உலக நாகரீகம் ஏதும் அறியாமல் இருப்பது எவ்வளவு அருமை பாருங்கள்..




சிறு குழந்தைகள் சந்தோசமாக விளயாடுவதைப் பார்க்கும்போது சற்று பொறாமையாக இருக்கும். ஒருமுறை இதே மாதிரியான ஒரு சூழ்நிலையில் எனக்கு நாம் குழந்தையாகவே இருந்திருக்க கூடாதா என்ற எண்ணம் மேலோங்கியிருந்தது. அதை எனது தாயாரிடம் கூட பகிர்ந்து கொண்டேன். ஆனால் அவரது விளக்கம் என்னை சற்றே யோசிக்க வைத்தது. எவர் எவர் எந்த வயதினராயிருந்தாலும் அந்த அந்த வயதிற்கேற்ற பிரச்சினைகள் அவர்களுக்கு இருக்கும்.. ஒன்றாம் வகுப்பு பிள்ளைக்கு வீட்டுப்பாடம் எழுதுவதிலிருந்து பக்கத்து இருக்கை பையன் கிள்ளுவது வரை பிரச்சினை இருக்கும். இந்த வாதில் நமக்கு அது பிரச்சினையாக தெரியாது .. ஆனால் ஒன்றாம் வகுப்பு பிள்ளைக்கு அதைவிட பெரிய பிரச்சினை இருக்காது. அதே போல் நமக்கு இப்போது இருக்கும் பிரச்சினை சிறிது காலம் சென்ற பிறகு காலாவதியாயிருக்கும். இந்த பதில் என்னை மலைக்க வைத்தது .. மறுக்க முடியவில்லை..


நாம் பெரியவர்களாக வளரும்போது ஏட்டு படிப்பினை படிக்கிறோம்..  நாகரீக போர்வையினை போர்த்திக்கொள்கிறோம்..  கொட்டாவியை மட்டுமல்ல நமது எண்ணங்களையும் வாய் விட்டு கூற முடியாத நிலையில் உள்ளோம்..  தலைக்குள் நம் எண்ணங்களை போட்டு பூட்டிகொள்ளாமல் குழந்தைகள் போல் கபடமின்றி இருந்தால் தூக்கம் நம் கண்களை தானாகவே தழுவும்.



While you smile , You are Beautiful.. While you Laugh, You are very Beautiful.. Atleast be beautiful.

No comments:

Post a Comment